ஒரு வழியா மதியம் ஒரு
மணி போல, நண்பன் வெற்றி செய்தியோட வெளியில வந்தான். முதல் வேலையா வீட்டுக்கு
தொலைபேசில கூப்பிட்டு சொன்னோம், அவனோட அம்மா என்னோட ராசி பத்தி உயர்வா சொன்னாங்க.
என்னோட நண்பன் நல்ல படிச்சு, நுழைவுத்தேர்வுல நல்ல மதிப்பெண் வாங்கி, எனக்கு
(என்னோட ராசிக்கு) நல்ல பேர் வாங்கி தந்தான். அங்கிருந்து மதிய சாப்பாடு சாப்பிட
கிளம்பினோம், பேசிக்கிட்டே திரு.வி.க பாலத்த தாண்டி வந்தோம். சரியான வெயில்,
சென்னை வெயில் பத்தி கேள்விபட்டிருக்கேன், ஆனால் அனுபவிக்கிறது அதுதான் முதல்
முறை, சட்டையெல்லாம் நினைஞ்சு போச்சு.