Sunday, 18 March 2012

பேர் வைக்க தெரியலங்க


எனக்கிட்ட ஒரு கெட்ட பழக்கங்க, நானா உக்காந்து எழுதவே மாட்டேன். யாராவது என்னை இழுத்துவிடனும், முக்கால்வாசி நேரம் அவங்கள அறியமயே இந்த உதவிய பலர் செய்றாங்க. இந்த தடவையும் அதே மாதிரிதான், ரொம்ப நாள் கழிச்சு, கூட படிச்சா நண்பர பார்த்தேன். அவர்கிட்ட நம்ம வலைப்பூவ பத்தி பேசும் போது, அவர் சொன்ன சில உற்சாக வார்த்தைகள் சிந்தனைய தூண்டிருச்சு. அட நம்ம எழுதுறத கூத்த பத்தியே எழுதலாமேன்னு துவங்கிடேன். (அப்பறமா இந்த பதிவில் வரும் அனைத்தும் வெறும் நகைச்சுவைக்காகத்தான், படிச்சிட்டு சிரிப்பு வரலைன்னா விட்ருங்க, அதிகமா சிரமப்படாதிங்க.)