Wednesday, 5 August 2020

என் ஒரு நாள்

செல்வேந்திரன் அவர்களின் “நகுமோ.. லேய் பயலே” புத்தக்கத்தை வாசித்து கொண்டிருந்தேன். அதில் ‘செல்வேந்திரனின் ஒரு நாள்’ கட்டுரையை படித்த போது, நாமும் இதை போல் எழுதினால் என்ன? என தோன்ற, எழுதத் துவங்கினேன். அவருக்கு வேலைகள் உண்டு, அதை பற்றி எழுதுகிறார். எனக்கு அப்படி எதுவுமே இல்லையே, எதை எழுதுவது?. சரி ஏதுமே இல்லாத ஒன்றை பற்றியும் எழுதித்தான் பார்ப்போமே என எழுதுகிறேன். தவறு எனில் தயவு கூர்ந்து பொறுத்தருள்க.