Saturday, 30 April 2016

கலந்தாய்வும். . . கந்திதமும். . .


மனசு முழுக்க பரவசத்தோட பேருந்துல ஏறினேன். அது வரைக்கும் கும்பகோணத்துல, என்னோட தாத்தா வீட்டுக்கு மட்டும்தான் நான் தனியா போயிருக்கேன். முதல் முறையா நானும் என்னோட நண்பன் நீதியலங்கரமும் மட்டும் தனியா சென்னை கிளம்பினோம். இப்ப மாதிரி இல்ல, அப்ப சென்னையில நண்பர்கள் யாருமே கிடையாது, அதுக்கு முன்னாடி ஒரே ஒரு தடவை மட்டும்தான் சென்னை போயிருக்கேன், ஊரப்பத்தியும் ஏதும் தெரியாது. தெரிஞ்சது எல்லாம் கிண்டியில இறங்கி, பசுமைவழிச்சாலை போகணுங்கிறது மட்டும்தான். அதனாலேயே ஒரு பரவசத்தோட கிளம்புனேன், என்னதான் பரவசம் இருந்தாலும் உள்ளுர கொஞ்சம் பயம் இருந்தது.