Sunday, 7 October 2018

ஒரு பயணம்… பல நினைவுகள்… (பாகம் 3)


 
திருமணம் முடிஞ்சு எல்லாரையும் வழியனுப்பீட்டு, நண்பர் ‘அஜீ’ கூட அவர் வீட்டுக்கு போயி, அவரோட குழந்தையப் பார்த்தேன். அப்பறம் அங்க இருந்து இன்னோரு நண்பர் வீடுன்னு சாயங்காலம் வரைக்கும் வரிசையா ஒவ்வொரு இடமா சுத்திக்கிட்டே இருந்தேன்.

Wednesday, 3 October 2018

ஒரு பயணம்… பல நினைவுகள்… (பாகம் 2)



எப்போ அசந்தேன்னு தெரியல, யாரோ மூஞ்சில தண்ணிய தெளிச்சு விட்ட மாதிரி இருந்துச்சு, என்னானு பார்த்தா, தர்மபுரி கிட்ட நல்ல மழை. முந்தின இருக்கையில இருந்த புண்ணியவதி சாளரத்த சரியா அவங்க இருக்கை நுனி வரைக்கும் மூடி வச்சிருந்தாங்க. அவங்களுக்கு கொஞ்சம் காத்தோட்டமும், எனக்கு மூஞ்சியில மழை சாரலும் வர்ரதுக்கு சரியா இருந்தது. அவங்கள எழுப்ப சங்டப்பட்டு, அவங்க பக்கத்துல தூங்கீட்டு இருந்தவர எழுப்பி (அவங்களுக்குள்ள என்ன உறவுன்னு தெரியல) சாளரத்த மூட சொன்னேன்.