Tuesday, 18 February 2014

தமிழ் ஐயா


மதுரை அமெரிக்கன் கல்லூரியில படிக்கிற வாய்ப்பு கிடைகிறது, கண்ண்டிப்பா ஒரு வரம் அப்படின்னுதான் நான் சொல்லுவேன். அது பழம்பெருமைகளோட, அருமையான நிலையில இருக்கும் போது படிச்சவன் நான். சமீப காலமா அங்க நடந்த சம்பவங்கள் அதனால அது அடைந்த நிலை, அங்க ஏற்கனவே படிச்ச எங்கள மாதிரி ஆட்களுக்கு ரொம்பவே வருத்தமான ஒரு சங்கதி. ஆனா இப்ப நான் எங்க கல்லூரிய பத்தி எழுதல, அத பத்தி எழுதனும்னு ஆரம்பிச்சா எழுதிக்கிட்டே போகணும். இப்ப நான் எழுத போறது அங்க எனக்கு அறிமுகமான ஒரே ஒரு மனிதர பத்திதான்.