எங்க வீட்டுல இருந்து அஞ்சாவது வீட்டுல குடியிருந்தார் வேல்முருகன். எங்க அப்பாவுக்கு பங்காளி, அம்மாவுக்கு அத்தைப் பையன், எனக்கு சித்தப்பா. கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லுவேன், இது வரை நான் பார்த்த திறமைசாலிகள்ல மிக முக்கியமானவர் இவர். ”சிற்பி, ஓவியர், மருந்தாளுநர், பள்ளிக்கூட ஆசிரியர், கல்லூரி உதவி பேராசிரியர்”ன்னு, பன்முகத்தன்மை கொண்டவர்.
Wednesday, 21 October 2020
Wednesday, 14 October 2020
ஓட்டம் (பாகம் - 2)
உலகமே இருண்டு போன அந்த நிலைமைல, எதார்த்தமா கால்சட்டை பையில கைய வைக்க அதுல ஒரு ஐம்பது ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருந்தது. வண்டியில ஏறுனதும் பயனசீட்டு வாங்கிட்டு மீதி பணத்த இந்த பையில வச்சிருக்கேன்.
அத பார்ததும், பல நாள் பசியில இருந்தவன் பழையசோத்த மாதிரி, பரவசமாகி போனேன். இனி யோசிக்கவே கூடாது செத்தாலும் வீட்டுல போயி அப்பா அம்மா கையிலதான் சாகனும்ன்னு முடிவெடுத்து மதுரை போற பேருந்த தேடி போனேன்.
Monday, 5 October 2020
ஓட்டம்
பதின் பருவம், சிந்தனை அபாரமா வளரும் பருவம், ஆனா சிந்திப்பதில் முக்கால்வாசி முட்டாள்தனமா இருக்கும் பருவம். பதின் பருவத்துல, நாம கொஞ்சங்கூட யோசிக்காம செய்யிற கிறுக்குத்தனமான செயல்கள் நிறையவே இருக்கும். அதுலையும் என்னை மாதிரியான ஆளுக்கு கேட்கவே வேண்டாம், (இப்ப வரைக்கும் ஏறக்குறைய அப்படித்தான் இருக்கிறேன்). ஆனா துளியளவு கூட யோசிக்காம நான் செஞ்ச முட்டாள்தானமான வேலைன்னா, அது வீட்டை விட்டு ஓடிப்போக செஞ்ச முயற்சிதான்.
Wednesday, 5 August 2020
என் ஒரு நாள்
செல்வேந்திரன் அவர்களின் “நகுமோ.. லேய் பயலே” புத்தக்கத்தை வாசித்து கொண்டிருந்தேன். அதில் ‘செல்வேந்திரனின் ஒரு நாள்’ கட்டுரையை படித்த போது, நாமும் இதை போல் எழுதினால் என்ன? என தோன்ற, எழுதத் துவங்கினேன். அவருக்கு வேலைகள் உண்டு, அதை பற்றி எழுதுகிறார். எனக்கு அப்படி எதுவுமே இல்லையே, எதை எழுதுவது?. சரி ஏதுமே இல்லாத ஒன்றை பற்றியும் எழுதித்தான் பார்ப்போமே என எழுதுகிறேன். தவறு எனில் தயவு கூர்ந்து பொறுத்தருள்க.
Thursday, 4 June 2020
நெஞ்சினிலே
‘பொன்னியின் செல்வன்’ல வர்ற வந்தியதேவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, நான் பொய் சொன்னா கூட எல்லாரும் நம்பிருவாங்க, ஆனா உண்மைய சொல்லும் போது ஒருத்தரும் நம்பவே மாட்டாங்க. நம்ப வைக்க, நான் ஒவ்வொரு தடவையும் படாதபாடு படனும், அதுக்கு ஒரு உதாரணம்தான் கீழ வரும் சம்பவம்.
கிபி 1993ஆம் ஆண்டு, தமிழ்நாட்டுல எல்லாரும், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு, அவங்கவங்க பொழப்ப பார்த்துட்டு இருந்த சமயம், என் வாழ்க்கையில ஒரு சம்பவம் நடந்தது. நான் அப்ப சீரும், சிறப்பும், சீருடையுமா மூன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அந்த சம்பவத்த சொல்றத்துக்கு முன்னாடி ஒரு சிறிய சங்கதி.
Tuesday, 26 May 2020
கண்காட்சி பாகம் - 4
Monday, 18 May 2020
கண்காட்சி பாகம் - 3
மறுநாள் விடியகாலை கிளம்ப வேண்டிய இருந்தது, முதலமைச்சர் மட்டும் இல்லாம பல அமைச்சர்கள் வர்றதுனால, 9 மணிக்கு ஆரம்பிக்கிற கண்காட்சிக்கு, 7 மணிக்குள்ள அங்க இருக்கனும்னு சொல்லிட்டாங்க (பாதுகாப்பு முன்னேற்பாடுகள்). நாங்களும் சாப்பிடாம கூட கிளம்பினோம். கிளம்புமும் போது, வீட்டுகாரர் வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தாரு.
அவர் கூட 20 நிமிடம் பேசிட்டு கிளம்பினோம், சரியா சொல்லனும்ன்னா அவர் பேசுறத கேட்டுட்டு இருந்தோம். நாங்க நேரமாகுதுன்னு கிளம்பும் போது, “நானும் கண்காட்சிக்கு வருவேன் தம்பி, முதலமைச்சர் நம்ம ஊருக்கு வந்திருக்காரு, நாம போயி ஒரு எட்டு பார்க்காம இருந்தா நல்லாவா இருக்கும்”ன்னாரு. நண்பன் படக்குன்னு “ஆமா ஆமா, இல்லைன்ன அவர் உங்கள தப்பா நினைச்சுக்க மாடாரா?”ன்னான். நல்ல வேலையா அவர் காதுல விழுகல, நான் சிரிப்ப அடக்கிக்கிட்டு வேகமா நடந்துட்டேன்.
Monday, 11 May 2020
கண்காட்சி பாகம் - 2
மறுநாள் காலையில எந்திரிக்க 8 மணி ஆகிடிச்சு, வீட்டுல யாருமே இல்ல. அந்த இரண்டு பேரும் சீக்கிரமே கிளம்பி வேலைக்கு போயிட்டாங்க போல, நாங்க கிளம்பும் போது வீட்டு சாவிய கீழ் வீட்டுல குடுத்துட்டு போகச் சொன்னாங்க. நேத்து பிரச்சனை முடிஞ்சிது, இன்னைக்கு இரவு எங்க தங்குறதுன்னு யோசிச்சோம். நேத்தே நிறைய வேலைகள் முடிஞ்சதால இன்னைக்கு நிறைய நேரம் இருக்கும், எப்படியாவது அலைஞ்சு திறிஞ்சு ஒரு இடத்த புடிச்சிடனும்.
இத யோசிக்க ஆரம்பிச்சு முழுசா 5 நிமிடம் கூட இருக்காது, கைபேசியில ஒரு அழைப்பு வந்தது, “தம்பீ, அந்த பதாகைய எப்ப மாத்துவிங்க”ன்னு அந்த உதவி பொறியாளர் (உ.பொ) கூப்பிடாங்க. “அட இருங்கமா இன்னும் கடை கூட திறந்திருக்காது, அதுக்குள்ள நீங்க வேற”ன்னு. இரண்டு பேரும் கிளம்பி பக்கத்துல கடை தேட ஆரம்பிச்சு, ஒரு அச்சகத்த புடிச்சோம். கடை பூட்டி இருந்தாலும் கைபேசி எண் இருந்தது, அதுக்கு கூப்பிட்டு “கடை எப்பங்க தெறப்பிங்க”ன்னு நேரத்தையும் கேட்டு வச்சோம்.