ஆங்கில புத்தாண்டுக்கும் நமக்கும் என்னைக்கும்
சம்பந்தம் இருந்ததே இல்ல. சின்ன வயசுல அத கொண்டாடுற மாதிரி ஏதும் சந்தர்ப்பம்
அமையல. வளர்ந்த பிறகு “அத ஏன் நாம கொண்டாடனும்?” அப்படின்ற கேள்வி மனசுக்குள்ள
வந்திருச்சு. என்னோட நண்பர்களும் ஏறக்குறைய என்னய மாதிரியேதான், இதெல்லாம் பெரிசா
கொண்டாட மாட்டாங்க. எங்களோட இந்த ஒற்றுமைய மித்தவங்க “ஒரே குட்டையில ஊறுண மட்டைகள்”ன்னு
சொல்லுவாங்க, ஆனா நாங்க இத “புத்திசாலிகள் எல்லாரும் ஒரே மாதிரி யோசிப்பாங்க”ன்னு
சொல்லுவோம்.