ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் வீட்டுல இருந்தணுக,
வந்ததுல இருந்து எங்கயும் வெளிய போகவே இல்லைன்னு, ஸ்பென்சர் பிளாசாக்கு போனோம்
(என்னோட விருப்பப்படி). நிறைய கடைகள் மூடப்பட்டு, கூட்டமே இல்லாம வெறிச்சோடிப்போய்
இருந்தது. இதே ஸ்பென்சர் முன்னாடி எப்படி இருந்தது, வார இறுதிகள்ல வகை கூட்டம்
இருக்கும். ஒரே ஒரு நல்ல சங்கதி, முன்ன மாதிரியே இப்பவும் மூனாவது மாடில உள்ள துணிகடைகள்ல
நூறு ரூபாய்களுக்கு கொசுவுசட்டைகள் கிடைக்குது. அது இன்னும் எத்தனை நாளைக்கோ
தெரியல.
Monday, 29 April 2013
Saturday, 13 April 2013
சென்னை பயணம் - 2
வீடு போய் சேர்ந்ததும் கொஞ்சம் இளைப்பாறுனேன்,
அப்பதான் திடிருனு நெனவு வந்து கைபேசி எடுத்து “பத்தரமா வந்துட்டேன்”னு சொல்ல
வேண்டிய இடங்கள்ல சொன்னேன். இல்லேன்னா, “ஏன்டா போய் இறங்குனா ஒரு வார்த்தை சொல்ல
மாட்டியா?”ன்னு, எனக்கு அழைப்பு வந்துரும். முன்னாடினா கூட அம்மா மட்டும்தான் இத
கேட்பாங்க, இப்ப இன்னொரு ஆள் வேற சேர்ந்தாச்சு.
நான் மதியம் போய் இறங்குனதுனால, வீட்டுல
‘வெள்ளையன’ தவிர ஒருத்தனும் இல்ல. அவனுமே மதியம் சாப்பாட்டுக்கு வந்திருந்தவன்,
நான் பொய் கொஞ்ச நேரத்துல வேலைக்கு கிளம்பிட்டான். அவன் போனதும் குட்டி தூக்கம்
போடலாம்னு தோனுச்சு. அப்பறம் என்ன
நெனச்சேனோ அந்த பகுதிய சுத்தி அப்படியே ஒரு நடை போயிட்டு வரலாம்னு, காதுல
கட்டுக்கம்பிய மாட்டி, பாட்டு கேட்டுகிட்டே நடக்க ஆரம்பிச்சேன்.
Subscribe to:
Comments (Atom)