‘பொன்னியின் செல்வன்’ல வர்ற வந்தியதேவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, நான் பொய் சொன்னா கூட எல்லாரும் நம்பிருவாங்க, ஆனா உண்மைய சொல்லும் போது ஒருத்தரும் நம்பவே மாட்டாங்க. நம்ப வைக்க, நான் ஒவ்வொரு தடவையும் படாதபாடு படனும், அதுக்கு ஒரு உதாரணம்தான் கீழ வரும் சம்பவம்.
கிபி 1993ஆம் ஆண்டு, தமிழ்நாட்டுல எல்லாரும், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு, அவங்கவங்க பொழப்ப பார்த்துட்டு இருந்த சமயம், என் வாழ்க்கையில ஒரு சம்பவம் நடந்தது. நான் அப்ப சீரும், சிறப்பும், சீருடையுமா மூன்றாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன். அந்த சம்பவத்த சொல்றத்துக்கு முன்னாடி ஒரு சிறிய சங்கதி.