பயணம்
மற்றும் புத்தகம், இந்த இரண்டும் ஒரு மனிதன நல்லா சிந்திக்க வைக்கும் அப்படிங்கிறது
என்னுடைய அபிப்பிராயம். ஒரு மனிதன சிந்திக்க வைக்கிறதும், சிந்தனையை தூண்டிவிடுறதும்
இப்பொ ரொம்பவே அரிதாயிடிச்சு. அத செய்ய வேண்டிய, பள்ளி, கல்லூரிகள் கூட அத செய்யிறது
இல்லைங்கிறது வேதனையான சங்கதி. நல்ல புத்தகங்கள், (இங்க நல்ல புத்தகங்கள் அப்படிங்கிறது
அவரவர் ரசனையை பொருத்தது) நம்ம சிந்தனையை சிறப்பா தூண்டிவிடும்.