Sunday, 22 May 2011

(ஆ..)ரம்பம்!

வலைப்பூ ஒன்று துவங்கி அதில் எனது கருத்துக்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் பல நாள் ஆசை. சரி என்று வலைப்பூவை  துவக்கினால் அதில் எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்பதில் பெருங்குழப்பம் . பேசுவதற்கு உகந்த செய்திகளோ  நிறைய உள்ளது அவற்றில் எதை முதலில் சொல்வது, "கழுதையின் இரு பக்கங்களிலும் அதற்கு பிடித்த உணவுகளை வைத்தால், அது எதை முதலில் உண்பது என்ற குழப்பத்திலேயே பட்டினி கிடைக்குமாம்". அது போல எதை முதலில் எழுதுவது என்று யோசித்தே ஒரு வாரம் கடந்து விட்டது  .
அது தவிர அனைவரும் படிக்கத்தக்க வகையில் நல்ல நடையில் எழுதவேண்டுமே என்ற அச்சம் வேறு. நண்பர்களிடம் வலைப்பூ துவங்கும் செய்தியை சொல்லி அவர்களின் மறுமொழிகளை வைத்து ஏதாவது எழுதுலாம் என்று அவர்களிடம் சென்றால், மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர் பலர்,  "சிரிப்பு வருகிறது" என்றான் ஒருவன், "ஒன்றுமே தோன்றவில்லை" என்றான் ஒருவன், "நன்றாக செய்" வாழ்த்தினான் ஒருவன், "நானும் சில கட்டுரைகளை தருகிறேன்" என்றான் ஒருவன், "பண உதவி எதுவும் வேண்டுமா" என்றான் ஒருவன்.
என்னை பற்றியாவது எழுதலாம் என்றால், இருபத்தைந்து வயதாகியும் படிக்கிறேன் என்ற பெயரில் என் தந்தையின் பணத்தில் வாழ்வதை தவிர வேறு எதையும் நான் சாதித்ததுமில்லை. இப்படி குழம்பிப்போய் எதுவுமே எழுதாமல் போவதற்கு பதில், இதை எழுதி உங்களையாவது  குழப்பலாம் என்றே இதை எழுதுகிறேன். (பிழைகளை தயவு செய்து பொருத்தருள்க).

4 comments:

  1. Alright, at last a blog spot is up and running for you... Congrats keep writing and share the links !

    ReplyDelete
  2. Warm Welcome & my best regards da

    ReplyDelete
  3. nee vila matta annaee

    ReplyDelete